பக்கம்:தமிழ் வளர்கிறது.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாரதிதாசன்

19


தமிழெனில் உயிரே யென்பான்
        தரிக்குமென் மூச்சே யென்பான்
அமிழ்தெனு முணவே யென்பான்
        அகத்தெழு முணர்ச்சி யென்பான்
கமழ்ந்திடு மணமே யென்பான்
        கவிதையின் சுவையே யென்பான்
தமிழ்க்கவி பார திக்குத்
        தாசனும் நானே யென்பான்!

இலக்கண இலக்கி யத்தில்
        எதுவுமே தெரியா ராகிக்
கலைக்களம் வளர்ப்போ ரென்றும்
        கவிஞர்கள் யாமே யென்றும்
தலைக்கனம் கொண்டு நாட்டில்
        தருக்கிடுங் கூட்டந் தன்னைத்
தொலைக்கவே பிறந்த தோன்றல்
        பாரதி தாச னன்றோ ?

காதலின் தூய்மை காட்டிக்
        கவிதையின் சுவையைக் கூட்டி
மாதரின் இன்பந் தன்னை
        மறுத்திடும் கூட்ட மோட்டிச்
சாதியு மதமு மன்பைத்
        தடுத்திடும் சதியைப் போக்கிப்
பாதகம் வீழச் செய்தோன்

        பாரதி தாச னன்றோ ?