இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தமிழ்காத்த போராட்டம்
தன் வாழ்வைத் தொண்டாக்கித் தமிழ்நாட்டை
வளமாக்கத் தகுஞ்செயல்கள்
நன்றாற்றி நம்பெரியார் ஈ.வேரா
முதுமைதனைக் கண்ட போதில்
தென்னாட்டில் தமிழகத்தில் இந்திஎனும்
புன்மொழியைத் தேசப் பேரால்
சென்னைமுதல் அமைச்சர்வர் கட்டாயம்
ஆக்கிவிடத் திட்டம் செய்தார்:
தாய் மீதில் விருப்பற்ற ஒரிளைஞன்
தன்னுழைப்பைத் தாய்நாட் டிற்கே
ஈயென்றால் மதிப்பானா?, எதிரிமொழி
மதித்துயிர்வைத் திருப்பான் பேடி!
தூயதமிழ் நாட்டில்செந் தமிழ்மொழியை
மறைத்திந்தி தோன்றின் நாடே.
தாயென்ற நிலைபோகும் தமிழ்சாகும்!
இந்தியெனும் கனிமே லாகும்!