இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10
மறுபடியும் சிட்டு "அம்மா, அம்மா" என்று கூப்பிட்டது.
தலைமை யாசிரியை எதிரில் பார்த்தாள்.
"அம்மா அம்மா, நான் தான் சிட்டுக் குருவி” என்று கூறிப் படபட வென்று இறக் கையை அடித்துக் கொண்டது அம்மாச் சிட்டு.
தலைமை யாசிரியை குனிந்து சிட்டைப் பார்த்தாள்.
'அம்மா வணக்கம்!' என்று கூறிக் கொண்டே சிட்டுக் குருவி அவள் காலில் வந்து விழுந்தது.
இந்தச் சிட்டு எதற்கு நம்மை வணங்குகிறது? என்று நினைத்தாள் தலைமை ஆசிரியை.
"ஏ, சிட்டுக்குருவி, உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டாள் தலைமை ஆசிரியை.
"அம்மா, நீங்கள் என்மீது கருணை வைக்க வேண்டும். என் குஞ்சுகள் இரண்டையும் தங்கள் பள்ளிக் கூடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தயவு செய்து தாங்கள் பள்ளியில் சோர்த்து கொள்ளுகள்.