sso பெரிய புராண விளக்கம் . ஒ
நந்திபணி கொண்டருளும் நம்பன் தன்னை
நாகேச்ர சமிடமா நண்ணி னானைச் சந்திமல ரிட்டணிந்து வானோர் ஏத்தும்
தத்துவனைச் சக்கரம்மாற் கீந்தான் தன்னை இந்து நுழை பொழிவாரூர் மூலட்டானம் -ν
இடம்கொண்ட பெருமானை இமையோர் போற்றும் அந்தணனை அரநெறியின் அப்பன் தன்னை -
அடைந்தடியேன் அறுவினைநோய் அறுத்த வாறே." அந்த நாயனாரே தாம் பாடியருளிய திருவாரூரைப் பற்றிய திருவிருத்தத்தில், z
ஆராய்ந் தடித்தொண்டர் ஆணிப்பொன்
ஆளுர் அகத்தடக்கிப் - பாரூா பரிப்பத்தம் பங்குனி . உத்திரம் பாற்படுத்தான்
நாளுர் நறுமலர் நாதன்
அடித்தொண்டன் நம்பிநந்தி நீரால் திருவிளக் கிட்டமை நீணா டறியும்அன்றே. என வருவதையும் காண்க.
இந்தத் தலத்தைப் பற்றி இந்தளப் பண்ணில் திருநாவுக் கரசு நாயனார் பாடியருளிய ஒரு பாசுரம் வருமாறு :
' பாலை நகுபனி வெண் மதி பைங்கொன்றை
மாலையும் கண்ணியும் ஆவன சேவடி . . .” .. காலையும் மாலையும் கைதொழு வார்மனம்
ஆலயம் ஆரூர் அரநெறி யார்க்கே. பிறகு வரும் 8 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : அந்த நமிநந்தியடிகள் நாயனார் அவ்வாறு திருவாரூர் அரநெறி என்னும் திருக்கோயிலை அடைந்து அகிலேசு வரரை வணங்கி விட்டு பக்தியோடு விருப்பத்தை அடைந்து தம்முடைய திருவுள்ளத்தில் பொங்கி எழுந்த விருப்பத் தோடு தலைவராகிய அந்த அகிலேசரைத் தரையில் விழுந்து வணங்கி விட்டுப் பிறகு தரையிலிருந்து எழுபவராகி