இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
17
சென்றாள். அப்போது, ஒரு முரடன் மிக விரைவாக எதிரில் நடந்து வந்தான். திடுதிப் பென்று, தலைமை ஆசிரியையின் கைப்பையைப் பறித்துக் கொண்டு ஓடினான்.
"திருடன் திருடன்"என்று தலைமையாசிரியை கத்தினாள்.
உடனே கூட்டம் கூடியது. தெருவில் சென்று கொண்டிருந்தவர்கள் அந்தத் திருடனை விரட்டிக் கொண்டு ஓடினார்கள்.
ஒருவன் திருடனை நெருங்கிப் பிடிக்கப் போனான். அப்போது அந்தத் திருடன் ஒரு கத்தியை எடுத்து நீட்டவே, அவன் பயந்து நின்று விட்டான். திருடன் ஓடிக் கொண்டிருந்தான். ஓடியவர்கள் செய்வதறியாமல் நின்று விட்டனர்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தன அந்த இளஞ்சிட்டுக்கள். விருட்டென்று பாய்ந்தன. இரண்டும் பறந்து சென்று திருடனின் முகத்தில் மாறி மாறிக் கொத்தின. அவன் அவற்றின் திடீர்த்தாக்குதலை-2-