இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நாழியொன்று தானிருக்கும்-அன்று
நானுமுன்னைப் பார்த்த தெலாம்
ஆழிவிழியாலே என்றன்-உளம்
அஞ்சிறையில் வீழ்ந்த தன்றே
சிந்தைதனை மீட்டிடவே- இனிச்
செய்யும் வகை யொன்றுமில்லை
நொந்துயிர்த்து வாடுகின்றேன்- ஒரு
நொடியும் உனை மறந்தறியேன்
தேகமது சோர்ந்ததனால் வரும்
சிறுதுயிலும் உன் கனவே
பாகுமொழியால் நீயும்- எனது
படர்களைய வேணு மின்றே.
43