முல்லைச்சுடர் விரிக்கும் முழுநிலவின் தேன்கதிர்கள்
சொல்லிற் குழைவது போல் சொல்லற்ற சோகத்தின்
பண்ணை விசைக்கின்ற பைங்கொடியார் அறியேனே-
கண்ணில் தெரியாமல் காதினிலே நெருப்பூற்றும்
மங்கையிந்த நீளிரவில் மனத்துயரக் கனவெல்லாம்
பொங்கப் பொழிகின்றாள் பொன்னாட்டுத் தீங்குரலில்
பாட்டறியாப் பண்வீச்சில் பச்சையுளத் துடிப் பெல்லாம்
ஓட்டுகின்றாள் வீதிமுனை ஒருமாடத் துள்ளிலிருந்தே.
மோனத்துயர் இருளை மோதிவந்தென் உளம்புகவே
நானும் செயலற்று நடுத்தெருவில் நின்றிருந்தேன் -
யாரோ இப் பெண்கொடியாள்? ஏனோஇப் பெருந்துயரம்?
சீராகக் கைபிடித்தோன் சிந்தையன்பு பிரிந்தானோ?
மனத்தன்பு வேறிருக்க மணவாழ்க்கை இங்காச்சோ?
தினைப் பொழுது கணவனுடன் சேர்ந்திருந்து வாழுமுன்னர்
கொடுங்காலன் துணைவனையே கொண்டோடிப் போனானோ?
படுந்துயரம் ஏதெனவே பண்ணலையும் கூறவில்லை;
உட்பொருளைக் கூறாமல் உணர்ச்சிதனைக் காட்டுதற்கும்
24