இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
மேக மண்டலம்
2
வளைத்துக் கழுத்தை நெளிவாக்கி
மகிழ்ச்சி பூத்துக் கால்பெயர்த்துத் திளைத்த கோலப் பேரழகு
தெறிக்க நடஞ்செய் மாமயிலே! விளைத்த நின்சீர்ப் பொலிவெல்லாம் விழையும் பறவை பலஇருந்தும் களைப்பொன் றறியா நினக்கிதுதான் காணி யான காரணம்என் ?
3
நீல மேனி படைத்திருந்தாய்,
நெடிய கழுத்துக் குழைவுடையாய்; ஆல வட்டம் போல்தோகை
அவிழ்த்து நடம்நீ பயில்கின்ருய், கோலும் நின்றன் நடம்போலக்
குவலயத்தே மடமகளிர் ஏலப் பயின்றும் வாராத
ஏற்றம் எங்கே கற்றன.நீ?