பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 இங்கிலீஷ் படித்தவனுக்கு இந்த விஷயத்தில் கொஞ்ச மேனும் நம்பிக்கை கிடையாது. ருஷ்யாவிலே ராஜ்யம் புரண்டு போச்சுதாமே. ஜாதி குலமெல்லாம் லோக முழு திலும் தலைகீழாகக் கவிழ்ந்து போமென்று ஆணிபெஸண்ட் பத்திரிகையில் போட்டிருந்ததாமே! 'தன் மத்யே இன்னு மொரு பேச்சு உம்மிடத்தில் கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேயிருந்தேன். ஆனி பெஸண்டுக்கு அஷ்டமாசித்துகளும் வருமென்று தஞ்சாவூரில் ஒரு பெரிய யோகீசுவரர் என்னிடம் நேரில் சொன்னர்...... உமக்குத் தெரியாதா? போகட்டும் போம்......மொத்தத்தில் உத்தம ஸ்த்ரீ. வெள்ளைக்கார ஜாதியில் பிறந்து நம்முடைய ஹிந்து மதத்தைச் சேர்ந்து விட்டதாக வாயினலே எப்போது சொன்னளோ, அவள் நம்மைச் சேர்ந்த வளாகவே நினைக்க வேண்டும். இந்த விஷயத்தில், காளி தாஸ்ரே, நம்முடைய அபிப்ராய மென்னவென்ருல், எந்தக் குலமாக, எந்த ஜாதியாக இருந்த போதிலும், நமது ஆலயத்தில் வந்து கும்பிட்டால் அவர்களை நாம் ஹிந்து வாக நினைத்து ப்ரேமை செலுத்த வேண்டும். இந்த ஆணி பெஸன்ட்கூட பூமி முழுதிலும் ஸ்ஹோதரத்வமும் ஸ்மத் துவமும் ஏற்படப் போகிறதென்று சொல்லுவதாகக் கேள்வி. அந்த வார்த்தை ஸ்த்தியமாகத்தான் இருக்கும். அந்தம்மாள் வெகு தூரம் படித்தவளாமே? அஷ்டமா வித்தி யென்கிற வார்த்தை வந்தால் அஸாதாரணமான புத்தியாவது உண்டென்பது நிச்சயந்தானே? நம்முடைய சாஸ்திரங்களும் அப்படியேதான் சொல்லுகின்றன. கலி மேலே போகப்போக ஜனங்களுக்குள்ளே கலப்பு மிகுதிப் பட்டு கடையிசில் ஒரே குலமாய் விடுமென்று சாஸ்த்ரம் சொல்லுகிறது. ஆனல் அது கெட்ட அர்த்தத்திலே சொல்கிறது. எல்லாரும் ஒரே குலமாய்க் கெட்டுப் போவார்களென்று சொல்லுகிறது. யதார்த்தம் அப்படி