பக்கம்:பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 அடுத்தவாரம் கூடப்போகிற மீட்டிங்கில் பேசித் தீர்மானம் செய்கிருேம். அதன் பிறகு நீ பெருங்கருணையுடன் எழுந் தருள வேண்டும். இப்போது போய் வருக. வந்தேமாதரம்" என்று மறுமொழி சொல்லியனுப்பி விடுவார். ஐயோ! என்ன உலகமடா, இந்த மண்ணுலகம். ஒழியாத ஏமாற்று; ஒழியாத வஞ்சனை: ஒழியாத கவலை. ஸாரமில்லை, ஸ்த்துக் கிடையாது; உள்ளூரப் பூச்சியரித்துக் குழலாயிருக்கும் வாழ்க்கை. ஒவ்வொருவனும், மற்றவன் மீது பழி கூறுகின்ருன். ஒவ்வொருவனும் தன்னிஷ்டப் படி விட்டுவிட்டால் எல்லாம் நேராக நடக்குமென்ற நம்பிக்கையுடனேதான் இருக்கிருன். ஆனல், நான் ஒருவன் சரியாக இருந்தால் போதுமா? மற்றவர்களை நம்பு வதற்கிடமில்லையே' என்று நினைக்கிருன். பிறரை நம்பு வதற்கிடமில்லை யென்றெண்ணி ஏமாற்றுகிருன். ஐயோ மூடா! நீ ஏமாற்றுவதல்ை, முன்னைக் காட்டிலும் பரஸ்பர நம்பிக்கை அதிகரித்து விடுமென்ரு நினைக்கிருய்? மனித ஜாதிக்குத் தீராத நோய் ஒன்று பிடித்திருக்கிறது. மாருத சாபம். இறங்காத விஷம். இதன் பெயர் பணம். இப்பேய்க்கு வணங்கும்படி அவனைத் துாண்டிவிடுவது விருப்பம். அதாவது ருசி நீங்கிய விருப்பம்; அறிவற்ற விருப்பம். ருசி ஸ் ஹி த மா ன விருப்பமுடையோர் கந்தவர்கள். அறிவு ஸத்யலோகக் கருவி. இன்னும் எத்தனையோ காட்சிகள் மண்ணுலகத்தி லிருந்து எடுத்துக்காட்ட வேண்டுமென்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆல்ை, பயனற்ற இவ்வுலகத்தைப்பற்றி அதிக மாக விஸ் தரிப்பது பயனுடைய கார்யமாகாது என்பது கருதி இத்துடன் நிறுத்தி விடுகிறேன். வஞ்சப் புகழ்ச்சியிலே பலவகையுண்டு. இடிபோலத் தாக்குவது ஒருவகை. வில்லம்பு, சொல்லம்பு மேதினியில்