பக்கம்:சிந்தனை துளிகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிந்தனைத் துளிகள்

139



1345. “ஒழுங்குகள் பழக்கப்படும் வரையில்தான் தொல்லை. பழக்கத்திற்கு வந்து விடின் அது பாதுகாப்பான சாதனம்.”

1346. “ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பது என்பது பிறப்பின் வழி அமைந்த கடமை.”

1347. “படித்தவர்கள் செய்த தவறுகளின் பயனே ஆட்சிமுறைகள்.”

1348. “சிறுநீரகம் சீராக இயங்காது போனால் விளையும் தொல்லையைப் போன்றே சிறியவர்கள் சீராக இயங்காவிடினும் துன்பம் ஏற்படும்.”

1349. “மலச்சிக்கலிலும் கொடியது மனச்சிக்கல். விரைவில் தீர்வு காண்பது நல்லது.”

1350. “தாம் செய்யாது விடும் காரியங்களால் உலகம் பெரிய துன்பத்திற்கு ஆளாவதை அறிக.”

1351. “வெற்று அரசியல், ஆர்ப்பாட்டத்தில் வெளிச்சம் போடுகிறது.”

1352. “நன்மையைக் கூட, நன்மைக்காகவே செய்யவேண்டும். நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு செய்யக் கூடாது.”

1353. “பொருட் செல்வம் போற்றும் பண்பற்றவர்கள் பொருளுடையராதல் அரிது.”

1354. “மிகவும் தரத்தில் குறைந்த மனிதர்கள் மற்றவர்களையும் தம் அளவுகோலையே வைத்து அளப்பர்.”

1355. “சமூகச் சேவையில் எவ்வளவு மகிழ்வு இருக்கிறதோ அவ்வளவு நெருக்கடியும் இருக்கும்.”

1356. “நாளுக்கொரு தொழிற்கூடம் கண்டால் நலிவு நீங்கும்.”