இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
16
சாவின் முத்தம்
ஒழுகாத நடத்தை இல்லை
உன்னிடம் ! மணிபோல் ஏடு
கிழிக்கின்ற சிரிப்பு இன்னும்
குறையவே இல்லை. சந்தை
வழியிலே போடு கின்ற
வார்த்தை போற் பேசுகின்றாய்!
சுழிபோட்ட மூளை . நச்சுத்
திரள் காட்டும் சட்டை மேனி
அடுக்கடுக் காய்ச்சிரித்து
அலைகின்றாய். கரிசல் நிற்கும்
நடுச்சாமக் குளிரில் மேற்கே
நடந்தாயாம்! மலையி டத்தில்
தொடுப்பாமே பள்ளி? எந்தன்
சுகந்தின்னக் கடிதம் போட்டாய்.
கெடுகெட்டிக் கோரையே! உன்
நெஞ்சுக்கு என்ன ஆழம்!
சிங்கத்தின் பிடரி போன்ற
சோளத்தின் பட்டுக் குஞ்ச
அங்கத்தை, தடித்த காற்று
அதட்டினால் கலைகின் றாய்நீ!
தங்கத்தை ஊது கின்ற
நெருப்பே நான் இன்பச் சேதி
திங்களன்றே கொடுத் தேன்.
செவ்வாய் தான் அனுப்பி வைத்தாய்!