நால்வீதி வருணனைநூல் ஒன்றை, நீண்ட
நாள்வாழ்ந்த சூரியக்கண் புலவர் தந்தார். பால்வீதி நூலொன்றை ரகுமான் தந்தார்.
படுக்கையறைக் கொக்கோக மென்னும் காமத் தோல்வீதி நூல் தந்தான் வீர ராமன். .
சோனட்டுச் செயங்கொண்டான் பரணி யென்னும் வேல்வீதி நூல் தந்தான். இவரோ, நேயர்
விருப்பமெனும் மற்ருெருநூல் வழங்கி யுள்ளார்.
எண்ணியெண்ணிப் புதுமைபல பின்னிப் பின்னி,
இக்கவிஞர் படைத்திருக்கும் நூலில் உள்ள மண்ணென்னும் முதற் கவிதை, உலகம் போற்று' மகாகவிகள் பாராட்டும் கவிதை யாகும். கண்ணென்னும் உறுப்பைப்போல் சிறந்து நிற்கும் கவிஞரிவர் போலிவரே எழுதக் கூடும். * - பெண்ளுெருத்தி பிள்ளை பெறல் போலே ஆண்கள்
பிள்ளைபெற முயன்ருலும் முடிவ துண்டோ?
வார்த்தைகளைத் தேளுக்கும் ரகுமான், • தண்ணீர் வாக்கியந்தான் ஆறெ'ன்று கூறு கின்ருர்.திர்த்தகிரிப் புலவர்களும் பிறரும், ஆற்றைத்
தினந்தோறும் பார்க்கின்ருர். பார்த்து மென்ன? வேர்க்கடலைக் கவிஞர்களா இவரைப் போன்று
விவேகத்தோ டிவ்வாறு கூறக் கூடும்? - பார்ப்பதற்கும் படிப்பதற்கும் கண்கள் போதும்
பாட்டெழுதக் கற்பனைக்கண் வேண்டு மன்ருே?
45