இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
இரவல்நடை எழுத்தாளர், வான்கோழி
எழுத்தாளர், இவர்கள் எல்லாம் ; ஒருவர்நடை போலெழுதிப் பிறர்கதையின்
பெயர்மாற்றி உயர்வு காண்பர். அருவிநடை எழுத்தாளர் பூவை நகர் ஆறுமுகம் அளித்த நூலில், இரவல்நடை எச்சில்நடை ஏதுமில்லை;
முகமூடி எழுத்து மில்லை.
அலைவரம்பு மீறிவிடின் நெய்தல்நிலப்
பகுதியெலாம் அழிந்து போகும். கலேவரம்பு மீறிவிடின் சமுதாயச்
சிந்தனைகள் கருகிப் போகும். இலைநரம்புச் சிறுகதைகள் பதிளுன்கைக்
கொண்டிருக்கும் இந்நூல், வாழ்க்கை நிலவரம்பை மீறவில்லை எனக்கூறி இத்தோடு நிறுத்து கின்றேன்.
பூவை. எஸ். ஆறுமுகம் அவர்கள் எழுதிய திருமதி சிற்றம்பலம்’ என்னும் சிறுகதைத் தொகுப்பு நூ லு க் கு 1966-ல் வழங்கிய அணிந்துரை.
13