29
391. ஐந்து பேரில் இளையவன்,
கலியாணத்திற்கு மூத்தவன்.
392. சுருக்கென்று குத்தும் முள்,
பொறுக்க முடியாது.
393. தீப்பொறி பறக்கும்; எரியாது.
கையிலே பிடித்தால் சுடாத
394. அஞ்சு காசுக்குச் சரக்கு வாங்கி,
இரண்டு வண்டியில் ஏற்றினேன்.
இன்னும் மீதி இருக்குது - அது என்ன?
395. மூன்று பெண்கள் ஒரே முகம்.
மூத்த பெண் ஆற்றிலே;
நடுப் பெண் காட்டிலே;
கடைசிப் பெண் வீட்டிலே.
396. வாசலில் வந்து நின்றவரை
வரவேற்க ஆளில்லை.
397. அண்ணன் வீட்டுத் தோட்டத்திலே,
பச்சைப் பாய் விரித்திருக்கிறது.
398. கட்டுப்பட்டு இருந்த மகளை ,
விட்டுப் பிரிந்து வந்தாள்.
399. பளபளவென்று பட்டுடுத்திப்
பதினாயிரம் குஞ்சலம் தொங்கவிட்டுத்
தெருவைச் சுற்றி வருகிற பெண்
திரும்பிப் பார்க்க மாட்டாளாம்.
400. ஓகோ மரத்திலே,
உச்சாணிக் கிளையிலே,
ஒட்டுச் சட்டியிலே
களிமண் இருக்கிறது.
401. யானை படுக்க இடமுண்டு;
கடுகு மடிக்க இலையில்லை.
402. கையில்லாமல் நீந்துவான்;
கால் இல்லாமல் ஒடுவான்.