பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

உவமைக்கவிஞர் சுரதா


நூல் : இந்திய பத்திரிகைத் தொழிலியல் (1935), பக்கம் - 97
நூலாசிரியர் : வி. நா. மருதாசலம்
பாஷியம் : விருத்தியுரை
எமதர்மன் : அறக்கடவுள்
நூல் : வைணவ சமய வினாவிடை (1936), பக்கங்கள் 11, 13.
நூலாசிரியர் : காரைக்கால் நா. ஸ்ரீ காந்த ராமாநுஜதாசர்
கருத்தா - இயற்றுவோன்

உபாதானத்தைக் கோசரிக்கும் அபரோக்ஷஞானம், செய்யும் இச்சை, முயற்சி இவற்றையுடைமை கருத்தா இயற்றுவோன்)த்தன்மையாம்.

நூல் : தருக்க சங்கிரகமும் தருக்க சங்கிரக தீபிகையும் (1936)
மொழி பெயர்ப்பு : சி. சுப்பையா சுவாமி
ஆதாரம் - பற்றுக்கோடு

அங்ஙனமாயினும் காலம் எல்லாவற்றிற்கும் பற்றுக்கோடு (ஆதாரம்) ஆகையால் எல்லா இலக்கணங்களுக்கும் ஆண்டு அதிவியாப்தி எனின், அற்றன்று, எல்லாவற்றிற்கும் ஆதாரத்தை யுண்டாக்கும் (காலீசு) சம்பந்தத்தினும் வேறான சம்பந்தத்தால் இலக்கணத்திற்கு ஒப்பியிருப்பதால்.

நூல் ; பக்கம் - 15
மூலகன்மம் - முதல் வினை

உயிர்கள் ஆணவத்தில் அழுந்திக் கிடக்குங்கால் பல பேதமான ஏற்றத் தாழ்வுள்ள ஆணவ சம்பந்தமுடையதாக இருந்திருத்தல் வேண்டும். அதனோடு இறைவன் அருள் சம்பந்தமும் உடையதாக இருந்திருக்கிறது. இவ்விருவகை சம்பந்தத்தால் உயிர்கள் அனாதியே பாவ புண்ணிய முடையதாயிருந்திருக்கின்றன. இதுவே மூலகன்மம் (மூலகன்மம் - முதல் வினை).