உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆட்டை வெட்டி இடையர்கள்

ஆசை யோடு கூடியே

வீட்டில் உண்ண லாயினர்;

‘விருந்து’ என்று கூறினர்.

‘கோனார் ஐயா!’ என்றதும்,

குரலைக் கேட்டுத் திரும்பினர்.

ஓநாய் ஒன்று அவ்விடம்

உரைத்த வார்த்தை கேட்டனர்.

‘வளர்த்த ஆட்டை நீங்களே

வதைத்துக் கொன்று தின்கிறீர்.

உளத்தில் மகிழ்ச்சி பொங்கவே

உண்டு ஏப்பம் விடுகிறீர்.

89