இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஆட்டை வெட்டி இடையர்கள்
- ஆசை யோடு கூடியே
வீட்டில் உண்ண லாயினர்;
- ‘விருந்து’ என்று கூறினர்.
‘கோனார் ஐயா!’ என்றதும்,
- குரலைக் கேட்டுத் திரும்பினர்.
ஓநாய் ஒன்று அவ்விடம்
- உரைத்த வார்த்தை கேட்டனர்.
‘வளர்த்த ஆட்டை நீங்களே
- வதைத்துக் கொன்று தின்கிறீர்.
உளத்தில் மகிழ்ச்சி பொங்கவே
- உண்டு ஏப்பம் விடுகிறீர்.
89