பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்தம் கேட்டு முயலுமே சட்டென் றுடனே விழித்தது; செத்துப் பிழைத்தோம்!” என்றது; சென்று எங்கோ மறைந்தது! பள்ளம், மேடு யாவிலும் பாய்ந்து சிங்கம் ஒடியும், துள்ளி ஒடும் மானேயே துரத்திப் பிடிக்க வில்லையே! தோற்றுப் போன சிங்கமோ தொங்கிப் போன முகத்துடன் பார்த்து வைத்த முயலினைப் பாய்ந்து கொல்ல வந்தது. முன்னே பார்த்த இடத்திலே முயலைக் காணுச் சிங்கமோ ஒன்றும் தோன்றி டாமலே, உள்ளம் வெம்பி உரைத்தது. கையில் கிடைத்த பொருள்தனைக் காற்றில் பறக்க விட்டேனே! ஐயோ! இரண்டும் போனதே ! அதிக ஆசை கெடுத்ததே !' 16