பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எவர்க்கும் உதவி செய்யாமல், ஏதும் இன்பம் அடையாமல், பவுனுய்ச் சேர்த்துத் தினம்தினமும் பார்த்துக் காத்து வருகின்றீர். ஒற்றைக் காசை கானெடுத்து ஒளித்தது மிகமிக மிகப்பெரிய குற்றம் என்றீர்; என்னையுமே கொல்லுவ தாக மிரட்டுகிறீர் ! ஒற்றைக் காசை ஒளித்ததற்கே உயிரை வாங்குவ தெனச்சொன்னல், இத்தனை காசையும் ஒளிப்பவர்க்கே எப்படித் தண்டனை கொடுப்பதுவோ !” என்றே கூறிப் பொற்காசை எறிந்தது: குருவி பறந்ததுவே! ஒன்றும் கூறிட முடியாமல் உயரப் பார்த்தனர் கருமியுமே!