xii மனை விளக்கு
பெண் புலி நடக்க முடியாமல் ஓரிடத்தில் இருக்க, அதற்கு இரை தேடி ஆண் புலி வழியில்ே யாராவது வருகிருர்களா என்று ஒளித்துப் பார்த்து நிற்கிறது.
நெல்லி மரமும் விளாமரமும் எங்கேயோ ஓரிடத்தில் உயிர் வைத்து கொண்டிருக்கின்றன. இந்தப் பாலேயில் பிறரைக் கொன்று வாழும் ம்றவர்க்ளாகிய வில்லேருழவர் கள் வாழ்கிருர்கள்.
எங்கோ ஒரிடத்தில் கொஞ்சம் பசுமை இருக்கிறது. அங்கே விளாமரத்தின் கீழே பச்சைக் கம்பலத்தை விரித் தாற்போலப் பயிர் பரந்திருக்கிறது. அதன் மேலே விளாம் பழங்கள் பழுத்து உதிர்ந்திருக்கின்றன. மாமரச் சோலேயும் அதில் இருந்து பாடும் குயிலும் பாலை நிலத்தை அடுத்து இருக்கின்றன. -
பழந் தமிழர் வாழ்க்கையில் தெய்வ பக்தி நன்முக இருந்தது. திருமாலையும் பலராமனையும் இந்தப் புத்தகத் "தில் வரும் செய்யுட்களில் காண்கிருேம். சக்கரபாணி யாகிய திருமால் வேத முதல்வராகவும் உலகமே உருவ மாகப் பெற்ற பெருமானகவும் விளங்குகிருர். அவர் எப் பொருளினுாடும் இருப்பவர்; எல்லாவற்றையும் தம்முள் அடக்கியவர். சர்வாந்தரியாமி; சர்வ வியாபகர். அவர் தமையனராகிய பல தேவர் வெள்ளை நிறமுடையவர்.
பல தெய்வங்கள் இருந்தாலும் உள்ளம் கசிந்து வழி படும் தெய்வம் ஒன்று ஒவ்வொருவருக்கும் இருக்கும். அத் தெய்வத் திருவருளைப் பெறவேண்டுமென்ற ஆர்வத் தினல் சோர்வில்லாமல் அவர்கள் சாதனங்களில் ஈடுபட் டார்கள். வழிபடு தெய்வத்தைக் கண்ணுலே காணலா மென்றும், அந்தக் காட்சியின்பம் எல்லா இன்பங்களிலும் சிறந்த தென்றும் நம்பினர்கள்.
நோன்பு நோற்று நீராடி ஈரம் புலராதபடியே சென்று கையினல் பிட்சை ஏற்று உண்ணும் துறவியர் இருந்தனர்.
இல்லற வாழ்வுக்குப் பொருள் இன்றியமையாதது என்பதை ஆடவர் உணர்ந்திருந்தனர். பொருள் ஈட்டுவது