இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
அழ. வள்ளியப்பா
❖ 37
யும் பிடித்துக்கொண்டு கண் கலங்கக் கூறிக் கொண்டே மெல்ல எழுந்தான்.
“பொன்னா, பேசாமப் படுத்துக்கோ. நாளைக் காலையிலே பூரண குணமாயிடும். அப்புறம் எழுந்து நடக்கலாம், ஓடலாம்; விளையாடலாம்” என்றாள் அம்மா.
பொன்னன் எதுவும் பேசாமல், மெல்ல நடந்து, அருகில் இருந்த மகாத்மா காந்தி படத்தின் எதிரே சென்றான். இரு கைகளையும் சேர்த்து, கண்களை மூடி வணங்கினான்.
மகனின் மனம் திருந்தியதைக் கண்டு அம்மாவும் அப்பாவும் ஆனந்தம் அடைந்தார்கள்.