பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொம்மைக்காரர்:
ஒன்றின் விலையைக் கூறவா?
ஓர் அணாத்தான் விற்கிறேன்.

நேருஜி:
நன்று. பொம்மை யாவையும்
நானே வாங்கிக் கொள்கிறேன்.

பொம்மைக்காரர்:
ஐந்து ரூபாய் தானங்யா
அத்தனைக்கும் மொத்தமாய்.

நேருஜி:
இந்தா ரூபாய் தருகிறேன்.
எல்லாம் எடுத்துக் கொள்கிறேன்.

நேரு நோட்டை நீட்டினார்
நிறையப் பொம்மை வாங்கினார்,
யாருக் காக வாங்கினர்.
யாவ ருக்கும் தெரியுமே!

அங்கு நின்ற பிள்ளைகள்
அனைவ ருக்கும் நேருஜி
தங்கக் கையால் பொம்மைகள்
தந்து தந்து மகிழ்ந்தனர்.
அருமை மாமா நேருஜி
அன்பாய்ப் பொம்மை தந்ததைப்
பெருமை யோடு பிள்ளைகள்
பேசிப் பேசிக் களித்தனர்.

48