உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“மதிப்பு மிகவும் உயர்ந்த தென்று
மனிதர் கூறிடும்—நல்ல .
வைர மேநான் உன்னை வைத்து
என்ன செய்குவேன்?

நெல்லில் ஒன்றே இந்த நேரம்
எனக்குக் கிடைப்பினும்—நான்
நிகரி லாத மகிழ்ச்சி யோடு
கொத்தித் தின்னுவேன்.

பாரில் உள்ள வைரம் யாவும்
ஒன்று சேரினும்—என்
பசியைத் தீர்த்து வைக்கும் சக்தி
இல்லை; இல்லையே!”

14