உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிட்டுக் குருவி ஒருவீட்டின்

சிறிய அறைக்குள் மெதுவாக

எட்டிப் பார்த்தது. அங்கொருவர்

எண்ணிப் பார்த்தார் காசுகளை.

காசுகள் யாவும் பொன்னாகும்!

கருத்துடன் அவற்றைத் தினம்தினமும்

ஓசையில் லாமல் எண்ணிடுவார்.

ஒருமுறை யல்ல; பலமுறைகள்!

“காசே கடவுள் எனக்கருதும்

கருமி, கருமி, கருமியடா.

மோசக் காரர்!' என்றவரை

வெறுப்புடன் ஊரார் பேசிடுவார்.

47