உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்த மனிதர் நரிகள் தம்மை
அயர்ந்தி டாமல் விரட்டியே
சென்று அவற்றில் ஒன்றை மட்டும்
சிரமப் பட்டுப் பிடித்தனர்.

பிடித்த நரியின் வாலில் துணியைப்
பிரிய மோடு சுற்றினர்;
எடுத்து வந்து துணியின் மீது
எண்ணெய் தன்னை ஊற்றினர்.

தீங்கு செய்த நரியின் வாலில்
தீயை வைத்து, முதுகிலே
ஓங்கி ஓங்கித் தடியி னாலே
உதைத்து விரட்ட லாயினர்.

பதறிக் கொண்டே ஊளை யிட்டுப்
பாய்ந்து ஓடும் நரியுமே
கதிர்கள் முற்றி யிருந்த வயலைக்
கடந்து செல்ல நேர்ந்தது.

நரியின் வாலில் வைத்த தீயும்
நன்கு பற்றி எரிந்ததால்,
அருமை யான கதிர்கள் யாவும்
ஐயோ, பற்றிக் கொண்டன!


28