உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தலைவ ரென்று சிலரை வைத்தோம்.
அவர்கள் சொற்படி
தகுந்த முறையில் போர்பு ரிந்தால்,
வெற்றி கிட்டிடும்.
பலத்த சண்டை போடும் போது
தலைவர் யாரெனப்
பார்த்துக் கண்டு பிடிப்ப தற்கே
சிரம மாகுதே!

ஆத லினால் குச்சி யாலே
குல்லா செய்துநாம்
அவர்கள் தலையில் மாட்டி வைப்போம்.
கண்டு கொள்ளவே.
சேதம் ஏதும் இன்றி அவர்கள்
காட்டும் வழியிலே
சென்று வெற்றி பெறுவோம்’ என்றே
எடுத்து ரைத்தது.

‘சரிதான்’ என்றே கூறி அவைகள்
குல்லா செய்தன.
தலைமை தாங்கும் எலிகள் தலையில்
மாட்டி விட்டன.
பெருமை யோடு தலைமை எலிகள்
முன்னே சென்றன.
பின்தொ டர்ந்து மற்ற எலிகள்
போக லாயின.


99