பக்கம்:சிரிக்க வைக்கிறார் கி. வ. ஐ..pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிரிக்க வைக்கிறார் கி.வா.ஜ á盛

மாதுளங்கனி

ஈரோட்டில் இவருடைய அன்பர் திரு.சேவுையர் ஒரு வக்கீல். அவருக்குக் கீதா என்ற பெண் இருந்தாள். அவளை இவர் தம் பெண்ணாகவே பாவித்து அன்பு வைத்திருந்தார். அவள் ஒரு நாய் வளர்த்து வந்தாள். பிறகு அதை வேறு ஊருக்கு அனுப்பிவிட்டார்கள். "இவளுக்கு நாய். மேலும் பிரியம். என்னிடமும் பிரியம். இப்போது நாயின்மேல் உள்ள பிரியத்தையும் சேர்த்து என்மேல் வைத்திருக்கிறாள்" என்று வேடிக்கையாகச் சொல்வார் இவர். - அவர்கள் வீட்டில் மாதுள மரம் உண்டு. மாதுளம் பழத்தை உதிர்த்துக் கொடுத்தால் அதை உண்ணாமல் அழகு பார்த்துக்கொண்டே இருப்பார் இவர். கீதா ஒரு நாள் மாதுளங்கனி கொடுத்தாள். "இது கீதா என்ற மாது உளங்கனிந்து கொடுத்த மாதுளங்கனி, ஆகையால் அதிகச் சுவையுடையது" என்று சொல்லி உண்டார். அப்படிச் சொன்னதை அவள் குமுதம் பத்திரிகைக்கு அனுப்பி வெளியிடச் செய்தாள். அவள் இப்போது இல்லை. . .

பெருங்குடி மக்கள்

அன்பர்கள் சிலரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந் தார்கள். அவர்கள் குடிப்

பழக்கம் உள்ளவர்களாம். "உயர்ந்த குடும்பத்தில் பிறந்தும் இந்தக் கெட்ட பழக்கம் உடையவர்களாக

இருக்கிறார்கள்' என்று