៩ឌ திருக்கோலம்
- எனது உனது என்றிருப்பார்’ என்று அன்னையினிடம் பழுத்த அன்புடையவரை இந்தப் பாட்டில் சொன்ன ஆசிரியர், -
எனக்கு உள்ள எல்லாம் -
அன்றே உனது என்று அளித்துவிட்டேன்’ என்று தம் இயல்பைப் பின்பு ஒரிடத்தில் சொல்வார்.
அணங்கே, அணங்குகள் நின்பரி வாரங்கள் ஆகையில்ை
வணங்கேன் ஒருவரை; வாழ்த்துகி
லேன்; நெஞ்சில் வஞ்சகரோடு
இணங்கேன்; எனதுஉனது என்றுஇருப்
பார்சிலர்; யாவரொடும்
பிணங்கேன்; அறிவுஒன்று இலேன்; என்கண்
நீவைத்த பேர்அளியே!
(தேவி, வெவ்வேறு சக்திகளாக உள்ள தெய்வப் பெண்கள் நின்னேச் சூழ்ந்து ஏவல் செய்யும் பரிவாரங்கள் ஆகையில்ை, உன்னேயன்றி. வேறு ஒருவரையும் அடியேன் வணங்கமாட்டேன்; வாழ்த்தவும் மாட்டேன்; உன் அன்பர் களாக இராமல் நெஞ்சில் வஞ்சகத்தை உடையவர்களோடு சேரமாட்டேன்; எனது எல்லாம் நின்னுடையதே. என்று எல்லாவற்றையும் நினக்கே அர்ப்பணம் செய்துவிட்டு அமைதியாக இருப்பவர் சிலர்; அவர் எல்லாரோடும் மாறு படர்மல் உறவ் பூண்டிருப்பேன்; யான் அறிவு சிறிதும் இலேைைலும் அடியேனிடம் நீ வைத்த பெரிய குளிர்ந்த கருணை இருந்தவாறு என்னே! அதுவே இத்தனைக்கும் காரணம். - . . . .
ஒருவரையும் என்பதில் உம்மை தொக்கது, ஒருவரை யும் வணங்கேன், ஒருவரையும் வாழ்த்துகிலேன் என்று