பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



வஞ்சக நரி

99


உன்னுடைய குணம் என்ன வென்று ஆராய்ந்தா இது நட்புக் கொண்டது? நீங்கள் இருவரும் இப்போது உண்மையான நண்பர்களாய் இல்லையா? அது போல ஏன் என்னையும் கருதக் கூடாது? என்று மிகவும் தந்திரமாகக் கேட்டது.

இதைக் கேட்ட மான்குட்டி, நரி சொல்வது சரி தான் என்று மனத்தில் தீர்மானித்துக் கொண்டது. அது காக்கையைப் பார்த்து காக்கையண்ணா, ஒருவனை நாம் புதிதாகப் பார்க்கும்போது அவனிடம் நம்பிக்கை யுண்டானால் போதாதா? அவனைப் பற்றி யாரிடம் போய் நாம் விசாரிக்க முடியும்? அது ஆகிற காரியமா? இது நம்மோடு இருக்கட்டும்’ என்று நரிக்காகப் பரிந்து பேசியது.

கடைசியில் காக்கையும் அரை குறையான மனத்தோடு சரியென்று ஒப்புக் கொண்டது. அதன் பின் அவை மூன்றும் ஒன்றாக வாழ்ந்து வந்தன.

ஒருநாள் நரி மான் குட்டியைப் பார்த்து,' ஓரிடத்தில் அருமையான பயிர் பச்சைப்பசேல் என்று வளர்ந்திருக்கிறது, வா, உன்னை அங்கே அழைத்துச் செல்கிறேன்’ என்று கூப்பிட்டது.

மான் அதன் கூடப் போய் நன்றாக வளர்ந் திருந்த அந்தப் பயிரை மேய்ந்து பசி போக்கிக்