இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
49
தோளில் ஏறித்
தொற்றிக் கொண்டா
தோகை கன்னம் தொடுவது?
சூ மந்திரக்காளி.....
நான் அந்தக் கிளியாகக் கடவது!
50
யாரோ வைத்த நெருப்பில்
ஏழைக் குடிசைகள் எரிந்தன;
வளரும் புகையில்
மாளிகை சில தெரிந்தன.