இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கண்தான இயக்கத்தாரை மட்டுமல்ல; கண் இமைக்காத தேவர்களையும் இவர் விடவில்லை. இவர் இலக்கணப்படி நல்ல கண்கள் என்றால் நொடிக்கு நூறு தரம் இமைக்க வேண்டும். ஏனாம்?
- "என் கண்களுக்குள்
- நீயல்லவா
- குடியிருக்கிறாய்!
- உனக்கு
- வெண்சாமரம்
- வீசவேண்டாமா?"
என்று காதலியைப் பார்த்துச் சொல்கிறார்; இத்தோடு நிறுத்துகிறாரா? இல்லை? தேவர்களை வம்புக்கு இழுக்கிறார்.
- "நிச்சயம்
- மிக நன்றாக இருக்கும்"
என்று பதிலைப் பந்துபோல் வீசுகிறார். இவருக்கு இருக்கும் செல்லக் குறும்பில் பாதியாவது அந்தத் தேவிக்கும் இருக்கும் அல்லவா!
நீ, "வீட்டுக்கு விளக்கு" என்று விளித்து நெருங்கும்போது தேவி 'வீட்டுக்கு விலக்கு' என்று கெட்டிக்காரத்தனமாக விலகி ஓடுகிறார்:
நல்ல நாடகம்!
நாடகமோ கதையோ கவிதையோ வார்த்தைகள் வைரங்களாக விழ வேண்டும்.
68