பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

21


நூல் : திவ்விய தேச யாத்திரை சரித்திரம் (1889) பக்கம்- 118.
நூலாசிரியர் : சேலம் பகடாலு நரமிம்மலு நாயுடு
(தமிழகத்தின் முதல் விடுதலைக் கவிஞர்)
காப்புச் சேனை

கி.பி. 1781 இல் வாரன்ஹேஸ்டிங்ஸ் காசிப் பட்டணத்துக்குப் போய் சிவாலைய காட்டில் கோட்டையிலிருந்த இராஜனைத் தாக்க, அந்த இராஜன் குடிகளுடைய சகாயத்தினால் தப்பித்துக்கொண்டு 20,000 காப்புச் சேனையோடு சூனார் (Chunar) கோட்டையில் போய்த் தங்கி, பிறகு குவாலியூரில் (Gwalior) 29 வருஷ காலம் அடைக்கலம் பெற்று வாழ்ந்து வந்தான்.

மேற்படி நூல் : பக்கம் - 57,
The Town Hall – நகர மண்டபம்

கி.பி. 1876 - 77 வருஷம் மாக்ஷிமை தங்கிய விக்டோரியா சக்கிரவர்த்தினியவர்களுடைய ஜேஷ்ட புத்திரரும், இளவரசருமாகிய, ஸ்ரீ பிரின்ஸ்சாப் வேல்ஸ் இராஜகுமாரர் காசி க்ஷேத்திரத்தைத் தரிசித்தபோது அவரால் கடைக்கால் போடப்பட்டு, சிரேஷ்ட தேசாதிபதிகளிற் சிறந்தவராகிய அப்பன் ரிப்பன் பிரபு (Lord Ripon) அவர்களால் கிரஹப் பிரவேசம் செய்விக்கலான ஒரு அழகிய தரும வைத்தியசாலை இருக்கின்றது. இதற்குப் பிரின்ஸ்சாப் வேல்ஸ் ஆசுபத்திரி என்று பெயர். இந்தக் கட்டிடத்திற்குப் பிடித்த செலவு தொகை முழுதும் சுதேச தரும பிரபுக்களால் கொடுக்கப்பட்டது.

இந்தத் தரும வைத்தியசாலைக்கருகில் கி.பி. 1870 ௵ ஜனவரி ௴ இந்தக் காசி க்ஷேத்திரத்தைத் தரிசித்த ஸ்ரீ விக்டோரியா சக்கிரவர்த்தினி அவர்களுடைய துவிதிய குமாரராகிய ஸ்ரீ டியூகாப் எடின்பர்க், என்பவருடைய விஜய ஞாபகச் சின்னமாக விஜயநகரம் மஹாராஜ ரவர்களால் கட்டி வைக்கலான நகர மண்டபம் (Town Hall) இருக்கிறது.

மேற்படி நூல் : பக்கம் -38, 39.
பிருந்தம் - துளசி

இப்போது இந்த வசனத்தை எங்கு நின்று பார்த்தாலும் திவ்வியமான துளசிச் செடிகள் பெருத்துப் பெரிய வனங்களாகப் பிரகாசிக்கின்றபடியால்