பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நூலாசிரியர்

35

ஏடுபெயர்த்தலும் கல்வெட்டுஆய்வும்

தமிழகத்தைப் பொறுத்தமட்டில், அச்சுக் கருவிகள் வருவதற்கு முன்பு, பனை ஓலையில் எழுதும் பழக்கமே இருந்தது. சங்க காலத்திற்கு முன்பிருந்தே இத்தகு பழக்கம் தமிழர்களிடம் இருந்து வந்துள்ளது. இரண்டு கடல் கோளினால் அழிந்துபோன ஏடுகள் எண்ணில் பலவாம்! தமிழர் செய்தவத்தால் எப்படியோ தொல்காப்பியம் மட்டும் கிடைத்தது. மூவேந்தர் ஆட்சி முடிவுக்கு வந்தபின், வேற்றவராட்சியால், தமிழகம் பட்டயாடு சொல்லுந் தரமன்று அந்நிலையில் ஏடுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டுமே என்ற எண்ணம் பலருக்கு இல்லாமற் போனதில் வியப்பேதுமில்லை. அன்றியும் அறியாமையால் அழித்த ஏடுகள் எண்ணிறந்தன. ஆடிப்பதினெட்டாம் பெருக்கின்போது, ஒவ்வொருவரும் தத்தம் வீட்டிலிருந்த ஏடுகளைக் காவிரியாற்றில் போட்டனர் என்பது வரலாறு. எப்படியோ சில ஏடுகள் தப்பித்தன. இவ் வேடுகளைத் தேடிக் கண்டுபிடித்து அச்சுக்குக் கொண்டுவந்த பெருமை 'தமிழ்த் தாத்தா' உ.வே.சாமிநாத ஐயருக்கு உண்டு. அதில் அவர்பட்ட பாடுகளை 'என் சரித்திரம்' நூலில் விரிவாக எழுதியுள்ளார்.

உரைவேந்தருக்கு இளமையிலிருந்தே ஏடு படிக்கும் ஆர்வம் இருந்து வந்தது. அவருக்கு முதன்முதல் தமிழ் அறிவுறுத்திய ஆசிரியர், திண்டிவனம் அ, ஆ, ந. உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியராய் இருந்த சீகாழி கோவிந்தசாமி ரெட்டியார், தம் வீட்டில் ஏடுகள் பல வைத்திருந்ததை அறிந்த உரைவேந்தர், ஆர்வம் காரணமாக அவ்வப்போது, அந்த ஏடுகளைப் படிப்பது வழக்கம். அதுவே பிற்காலத்தில் நூல் ஆய்வு செய்வதற்கு உறுதுணையாயிற்று எனலாம்.

"1921ஆம் ஆண்டில், கோடைவிடுமுறையில், எனக்குத் தமிழ் கற்பித்த ஆசிரியர், சீகாழி திரு. கோவிந்தசாமி ரெட்டியார் அவர்கள், இந்நூலின் (சூளாமணி) அச்சுப்படி ஒன்றும், ஏட்டுச் சுவடி ஒன்றும் வைத்து, ஒப்புநோக்கிப் பல திருத்தங்களும் விடுபட்டசிலபாட்டுக்களும்சேர்த்துக்கையெழுத்துப் படியொன்று ஆயத்தம் செய்தார்கள். ஏடு படித்த வருள் யானும் ஒருவன் ஆயினும், அத்துணைத் தமிழ்ப் பயிற்சியில்லாமையால், அப் படி'யில் கருத்துன்றாது போயினேன்!”

என்று உரைவேந்தர் குறிப்பிடுவது இங்குக் குறிக்கத் தகும்.