பக்கம்:பாரதித் தமிழ்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 பாரதி தமிழ்

காளி:-சங்கதி யென்ன? ஸந்:-ஏப்ரல் மாதம் 22-ந் தேதி ஒரு வால் நகடித்திரம் எரி நக்ஷத்திரம் ஒன்றைத் தன் வாலில் கள்விக் கொண்டுவந்துபூமியின்மேல் மோதப் போவ திாகவும் அதனால் இந்த பூமண்டலம் தூள் தூளாக நொறுங்கிவிட்ப் ப்ே வ்தாசுவும் சொல்லுகிறார்களே? அது வாஸ்தவமாக இருக்குமா? காளி:-பொய்க் கதை. லந்:-உமக்கெப்படித் தெரியும்? அமெரிக்கா தேசத்தில் யாரோ ஒரு பெரிய வான சாஸ்திரப் பண்டிதர் சொல்லியிருக்கிருராமே? அது பொய் யென்று நீர் எப்படிக் கண்டீர்?

காளி:-பொய்க் கதைதான். எனக்கு நிச்சய மாகத் தெரியும். ஏப்ரல் மாதம் 23-ம் தேதி நீர் என்னிடம் வந்து சேரும். அப்போது காரணங்கள் சொல்லுகிறேன்.

ஸந்:-பூமி தூளாய்ப்போன பிறகு நான் உம்மிடம் வந்து கேட்பதெப்படி? நீர் விடை சொல்வதெப்படி?

காளி:-இந்த பூமியில் இன்னும் நாமே நெடு நாளிலிருந்து பல்வித நியாயங்கள் நடந்து நிறை வேறுவதைப் பார்க்கப் போகிருேம். பூமியில் நல்ல யுகம் தோன்றப் போகிறது. மனித ஜாதி முழு மைக்கும் விடுதலை யுண்ட்ாகப் போகிறது. நீர் சொல்லிய ருஷிய ராஜ்யப் புரட்சியானது. இனி வரப்போகிற நற்காலத்தின் முன்னடையாளங்களில் ஒன்று. பூமி தூளாகாது. . மனிதர் ஒருவருக் கொருவர் செய்யும் அநீதி தூளாகும்.

ஸ்ந்:-சரி, சரி; உம்முடைய ஞான மூட்டையை நம்மிடம் அவிழ்க்கத் தொடங்கிவிட்டீர்............

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/249&oldid=605570" இலிருந்து மீள்விக்கப்பட்டது