10
ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை தாங்கிப் பேசும் போது, "நாங்கள் ஆங்கிலேயரிடத்தில் பிச்சை கேட்கவில்லை; உரிமையைத்தான் கேட்கிறோம்” என்று முழங்கினார். பழைய டில்லியில் யமுனை ஆற்றங்கரையில் நம் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் சமாதி இருக்கிறது. அதன் அருகிலே வேறு இரு தலைவர்களின் சமாதிகளும் இருக்கின்றன. அந்தத் தலைவர்கள் யார், யார்?
பழனி: நேரு மாமா, இன்னொருவர்...
ராஜாத்தி : லால் பகதூர் சாஸ்திரி.
பொன்: இருவரும் சேர்ந்து சரியான விடையளித்து விட்டீர்கள். குடல் காய்ச்சல்” என்றால் என்ன?
பழனி: என்ன! குடல் காய்ச்சலா!
பொன்: ஆம், தமிழ்நாட்டில் சில பகுதிகளில் அப்படித்தான் சொல்கிறார்கள். குடலை அதிகமாகப் பாதிக்கும் காய்ச்சலாதலால்...
ராஜாத்தி: தெரியும், தெரியும். டைபாய்டு காய்ச்சல்தான்.
பொன் : ரொம்ப சரி, உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே ஸ்டேஷன் எங்கே இருக்கிறது?
பழனி : ஜப்பானில்