இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பறக்க விடலாம்
❖
கோட்டும் சூட்டும்
போட்டுக் கொண்டு
வீட்டுப் படியை
மிதித்த போது
கையில் என்ன
என்றான்தம்பி
கண்ணில் ஏறிக்
கர்வம் நிற்க
வேந்தர் மூவர்
வெற்றிக்காகத்
தந்த பட்டம்
என்று கூறிப்
பார்த்தேன்; தம்பி
பாய்ந்தான் புலியாய்!
எங்கே என்றுநான்
இரைந்து கேட்டேன்...
'நூல் வாங்க......
நூல் வாங்க...”
33