இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
296
அறத்தின் குரல்
மற்றவர்களும் போய் அவரவர்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டனர். துரியோதனாதியரிடமிருந்து தங்களுக்குரிய நாட்டை எவ்வாறு மீட்பது என்ற சிந்தனையே அப்போது யாவர் மனத்தையும் ஆட்கொண்டிருந்தது. அதைப் பற்றி யோசிப்பதற்காகக் கண்ணன் முதலியவர்களோடும் உபலாவியம் இடத்திற்குப் போய்ச் சேர்ந்தனர் பாண்டவர்கள்.