பக்கம்:கன்னியாகுமரி அன்னை மாயம்மா.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓம் 鬱 அ ன் னை ம | ய ம் ம . ផូ Go ទ្រ ، و مسع... י* אגא. " நீலத்திரை கடல் ஒரத்திலே நித்தம தவம் செய்யும் குமரி அன்இன " என்பது தமிழ்க் கவிஞன் பாரதியின் வாக்கு. இந்த உலகம் இனிது வாழ நாளும் தவம் செய்து கொண்டே இருக்கிருள் அன்னை குமரி. "குமர் என்ற தெய்வம் இந்தியாவின் தெற்கே கடத் கரையில் குடிகொண்டு இருந்தது. மக்கள் அதை நாளுக் வழிபட்டார்கள்” என்று கூ று கி ரு ன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க நாட்டில் வாழ்ந்த பெரிப் ரூஸ் என்ற அறிஞன். பாரதத்தின் தென் கோடியில் அமைந்திருப்பதால் கன்னியாகுமரிக்குப் புவியியல் முக்கியத்துவம் உண்டு. வரலாற்றுக் காலம் தொட்டே அது ஆன்மீகத்தோடு தொடர்பு கொண்டது என்பது நமக்குத் தெரிந்த ஒன்று. காசியை நினைக்கும் இந்து, கங்கை நீரில் குளிக்கும் இந்து கன்னியாகுமரியை நினைக்காமலிருப்பதில்லை. தென் குமரியில் நீராடி விட்டு கால் நடையாகவே காசிக்குச் சென்ற மாந்தர்களின் வரலாற்றை இலக்கி யங்கள் கூறுகின்றன. குமரியில் நீராடி விட்டு கங்கைக்குச் சென்ற பயணி களைப்பற்றிக் கூறும் செவிவழிக் கதைகள் ஏராளம் உண்டு, முக்கடலின் சங்கமத்தில் மூழ்கி எழுந்தால் முன்னை வினை எல்லாம் போகும் என்பது பாசம்பரியாமான தம்பிக்கை.