இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
குமுறும் பேரலைகள் - தாவிக்
குதிக்கும் கடற்கரையில்
இமயப் பெருமலைபோல் - நின்றான்
இடிபோல் முழக்கமிட்டான்
சித்திரப் பாவையைப்போல் - மக்கள்
சிறிதும் அசையாமல்
முத்திரைப் பொன்னழகன் - பேச்சை
முன்னின்று கேட்டார்கள்
37