இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உடைந்த புல்லாங்குழல்
இடைக்கொடி மாளிகையை
ஏந்தும் பவள
நடைத்தூண் நடுங்க
நடந்துவந்தாள்; மாடியிலே அஞ்சி ஒளிந்தாள்; அரும்பிரண்டும் போதாகிக் கொஞ்சும் வசந்தம் குலுங்கும் அவள்மார்பில் கட்டிப் புதைத்துக் களித்த அவன்தலையைத் தொட்டிக்குள் வைத்துப் புதைத்தாள்; கிளிப்பேச்சுப் பண்ணில் குளிப்பாட்டிப் பார்த்த அவன் தலையை மண்ணில் புதைத்து மறைத்தாள்; அத் தொட்டியிலோர்
______________________________ கண்ணீர்த்தவம் 28 ______________________________