இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஆவ லுடன்சமைத்து
ஆறவைத்த நல்லுணவைக்
காவல்நாய் கவ்வுவதைக்
கண்ட அவளண்ணன்
கொன்று குவிக்கக்
கொலைவாளைத் தூக்கினான்;
நின்றான்;சிறிது
நிதானித்தான்; தந்தையிடம் "பேரேட்டுப் பூச்சியென்று பேசா திருந்துவிட்டோம்; தேரோட்டக் காதல் - நடத்துகிறான் கோதையிடம்!
சேல்விழியாள் வேலப்பர்
செல்வமகள் என்றறிந்தும் வேல்முனையில் ஏறி விளையாட்டாய்க் குந்திவிட்டான்!
தாயில்லாப் பெண்ணென்று
தட்டி வளர்க்காமல்
நீரன்றோ வீட்டில்
நெருப்பை வளர்த்துவிட்டீர்!"
என்று குமுறினான்;
இதைக்கேட்ட வேலப்பர்
'நன்று மகனே!
நடுங்காதே! நாளை
_____________________________ கண்ணிர்த்தவம் 15 _____________________________