பெருங்கதை/3 19 படை தலைக்கொண்டது

விக்கிமூலம் இலிருந்து
  • பாடல் மூலம்

3 19 படை தலைக்கொண்டது

தருசகன் செயல்[தொகு]

வத்தவற் பெற்ற வலிப்பின னாகி
மத்த யானை மகத மன்னனும்
அருமுர ண்டுதொழி லிளமைய னிவனொடு
தரும சாத்திரந் தலைக்கொள் கென்று
பூசனை வழக்கொடு புரையவை நடுவண் 5
வாசனைக் கேள்வி வழிமுறை தொடங்கலின்

ஓடிய பகைமன்னர் மீட்டும் போர்செய்தற்கு வரல்[தொகு]

பரந்த மன்னர் நிரந்துகண் கூடிக்
கற்ற நூலிற் செற்ற வேந்தன்
வேறுபடக் காட்டிக் கூறுபட வறுப்பத்
தொலைதல் காரண மாகவது துணிந்த 10
நிலையி னெஞ்சினர் நும்முள் யாரெனத்
தலைக்கூட் டமைத்துத் தம்முள் வினவத்
தெய்வ மிடைநிலை யாக வதன் றிறம்
ஐயந் தீர வறிவம் யாமெனத்
தம்பாற் றெளிந்த தன்மைய ராகி 15
வெம்போர் நிகழ்ச்சி யென்கொன்மற் றிதுவென
வருபடை யொற்றரை வழுக்கி மற்றவன்
பொருபடை போதரப் புணர்த்த தாகுமென்
றதுவும் பிறவு மாய்வுழிச் செவ்விதிற்
பேணி வாழும் பெற்றிய ராகி 20
வாணிக வுருவொடு வந்திடைப் புகுந்த
வீர ராகுவோர் வேறுதிரிந் தொடுங்கி
ஆரிருண் மறைஇ யருஞ்சின மழித்தோர்
போந்தில ராதலிற் பொருத்த முடைத்தென
வேந்தனில் வந்தோர் வினவுதல் வேண்டா 20
அமர்மேற் கொண்டோர் யாரே யாயினும்
தமராக் கருதித் தம்வயிற் றெளிதல்
ஏல்வன் றென்ன மேலவை கிளவா
இளிவஞ்சு முனிவரே யாயினு மற்றினித்
தெளிவஞ்சு தகைத்தெனத் தெளிவுமுந் துறீஇ 30
வஞ்சினம் செய்து வெஞ்சினம் பெருகக்
கெடுத்த லூற்றமொடு கடுத்தன ராகிப்
பெயர்த்தும் பெரும்படை தொகுத்தனர் கொண்டு

பகைவர் மகதநாட்டுச் சோலை முதலியவற்றை அழித்தல்[தொகு]

நன்னாடு நடுங்க நண்ணித் துன்னிய
ஈர நெஞ்சத் தார்வ லாளர் 35
பாரந் தாங்கும் பழமை போல
இலைக்கொடிச் செல்வமொடு தலைப்பரந் தோங்கிய
கணைக்கா லிகணையுங் கமுகும் வாழையும்
சினைப்பெரு மாவும் பணைக்காற் பலாவும்
கொழுமுதற் றெங்கொடு முழுமும றொலைச்சிக் 40
கழனி விளைநெற் கனையெரி கொளீஇப்
ப.ன நன்னாடு படியழித் துராஅய்ச்
செயிர்ப்பிற் சிறந்தவர் பெயர்ச்சி நோக்கிப்

பகைவர் செயலைத் தருசகன் அறிந்து படைதிரட்டல்[தொகு]

படையொற் றாளர் கடுகுபு குறுகிக்
காவலற் கிசைத்துக் கண்டுகை கூப்பி 45
வேக மன்னர் மீட்டும்வந் திறுத்த
வெங்கட் செய்தொழி றன்கட் கூறலும்
மறுநோய் மக்களி னாழ்ந்த மனத்தன்
செறுவேல் வேந்தன் செய்வதை யறியான்
கூட்டம் பெருக்கி மீட்டுவந் தனரெனின் 50
ஆற்ற லெல்லா மளந்தபி னல்ல
தூக்க மிலரெனத் தூக்க மின்றி
மனத்தி னெண்ணி மற்றது கரந்து
சினத்த நோக்கமொடு சீறுபு வெகுண்டு
செருவுடை மன்னரைச் சென்றுமே னெருங்குதும் 55
பொருபடை தொகுத்துப் போதுகென் றேவலின்
விருத்தி காரரும் வேண்டியது பெறூஉம்
உரத்தகை யாளரு மொருங்கு வந்தீண்டுக
செருச்செய வலித்தனன் செல்வன் சென்றெனத்
தானை யணியத் தலைத்தா ளணியுள் 60
யானை யேற்றி யணிமுர சறைதலும்

உதயணன் செயல்[தொகு]

வணங்கார் வணக்கிய வத்தவர் பெருமகன்
நுணங்குபொரு ளமைச்சரொ டுணர்ந்தன னாகிக்
கண்ணிய பொருட்குத் திண்ணியது தெரிய
உறுப்போ ரன்ன வுள்பொரு ளமைச்சரும் 65
மறப்போர் மன்னனு மாணவே றிருந்து
செயற்படு கருமத் தியற்கை யிற்றெனப்
பெயர்த்தும் வருபடை யழிப்பது வலித்து
வயந்தக குமரற் கியைந்தது கூறும்

தான் போர்செய்யச் செல்வதாகச் சொல்லி உதயணன் வயந்தகனைத் தருசகன்பால் விடுத்தல்[தொகு]

மயங்கிதழ்ப் படலை மகதவற் கண்டு 70
செருச்செய் தானைப் பிரச்சோ தனன்றன்
பாவையை யிழந்து பரிவு முந்துறீஇச்
சாவது துணிந்தியான் சேயிடைப் போந்தனென்
மன்னுயிர் ஞாலத் தின்னுயி ரன்ன
அடுத்த நண்புரைத் தெடுத்தனை யாகத் 75
தன்மேல் வந்த தாக்கரும் பொருபடை
என்மேற் கொண்டனெ னாகி முன்னே
எறிந்தனெ னகற்றி யின்பம் பெருகச்
சிறந்ததோர் செய்கை செய்தே னின்னும்
மறிந்துவந் தனரே மாற்றோ ரென்ப 80
தறிந்தனெ னதன்மாட் டவலம் வேண்டா
என்னி னாதற் கிசைகுவ தாயிற்
பின்ன ரறிய பிறபொருள் வலித்தல்
யான்சென் றிரியினஃ தறிகுந ரில்லைத்
தான்சென் றுறுவழித் தளர்ந்த காலை 85
மகத மன்னனை மலைந்துவென் றனமென
மிகுதி மன்னர் மேல்வந்து நெருங்கின்
என்னா மன்ன தின்னாத் தரீஉம்
எடுத்துநிலை யரிதென வேதுக் காட்டி
என்குறை யாக வொழிக வெழுச்சி 90
தன்படை யெல்லாந் தருக வென்னொடும்
அடற்றொழில் யானைப் படைத்தொழில் பயின்றோர்
எனைவ ருளரவ ரனைவரும் யானும்
ஏறுதற் கமைந்த விருங்கவுள் வேழமும்
வீறுபெறப் பண்ணி விரைந்தன வருக 95
தன்பாற் படைக்குத் தலைவ னாகியோர்
வன்பார் மன்னன் வரினு நன்றெனக்
கூறினன் மற்றெங் கோமக னென்றவற்
றேறக் காட்டி மாறுமொழி கொண்டு
விரைந்தனை வருகெனக் கரைந்தவற் போக்க 100

வயந்தகன் செயல்[தொகு]

வாயன் றாயினும் வந்துகண் ணுற்றோர்
மேவ வுரைக்கும் மேதகு வாக்கியம்
வல்ல னாகிய வயந்தக குமரன்
செல்வன் றலைத்தாட் சென்றுகண் ணெய்தி
இறைவன் மாற்றமுங் குறையுங் கூற 105

தருசகன் செயல்[தொகு]

மகதவ ரிறைவனுந் தமர்களைத் தரீஇநமக்
குறுதி வேண்டு முதயண னுரையிது
மறுமொழி யாதென மந்திர மாக்கள்
யாதவன் வலித்த தப்பொரு ளறிதல்
தீதன் றாதலிற் றெளிந்து செய்கென 110
மறுத்தல் செல்லான் வாழி யவர்நிலை
அழிக்கும் வாயி லறியுந் தானென
ஒன்றின னுரைத்ததை யொன்றுவன னாகி
அருஞ்சின யானையும் புரவியு மமைந்த
இருஞ்சின விளையரும் வருகென வேவி 115

கேகயத்தரசன் எண்ணுதலும் தெரிவித்தலும்[தொகு]

வலிகெழு நோன்றாள் வத்தவன் வலித்ததும்
கலிகெழு மைத்துனன் கருத்து நோக்கி
முற்கிளை வேண்டுநர் மற்றவர்க் கியைந்த
அற்றந் தீர்க்கினது பிற்பயம் பெருகும்
அற்று மன்றிப் பற்றா மன்னர் 120
மேல்வந் திறுப்ப வேல்பல படையொடு
மாயா திருப்பிற் கிளையோ மற்றிவன்
வேற்றா னெனவு மாற்றா னெனவும்
போற்றா மன்னர் புறஞ்சொற் படுமெனக்
கேகயத் தரசனுங் கிளந்துபல வெண்ணிக் 125
காவல் வேந்தனைக் கண்டுகை கூப்பி
வானோர் பெரும்படை வந்த தாயினும்
யானே யமையு மடிக ளென்னை
விடுத்தற பாற்றென வெடுத்தவ னிசைப்பத்

தருசகன் எண்ணல்[தொகு]

தந்தை பெருங்கிளை காரண மாக 130
முந்து ம்பபடை முருங்கத் தாக்கி
வந்த வேந்தன் வலித்ததுந் தங்கைக்குச்
சென்ற குமரன் முந்தைக் கூறிய
மாற்றமு மனத்தே யாற்றுளி புடைபெயர்ந்
தொலிக்குங் கழற்கா லுதயண குமரன் 135
வலிக்கும் பொருண்மேல் வலித்தன னாகித்

தருசகன் கேகய அரசனைப் போருக்கு விடுத்தல்[தொகு]

தன்படைத் தலைவ னாக வெம்மொடே
வன்படை யாளன் வருக வென்றனன்
மாண்ட வத்தவ ராண்டகை யாதலின்
நம்மேல் வந்த வெம்முரண் வீரர் 140
தம்மேற் சென்று தருக்கற நூறுதல்
வத்தவ ரிறைவனும் வலித்தன னவனோ
டொத்தனை யாகி யுடன்றமர் செய்ய
வல்லை யாயிற் செல்வது தீதன்
றென்றவன் விடுப்ப நன்றென விரும்பி 145
ஒட்டிய குமர னுள்ள நோக்கி

தருசகன் வயந்தகனுக்குக் கூறலும் அவனை விடுத்தலும்[தொகு]

மட்டலர் பைந்தார் மகதவன் வயந்தகற்
குற்ற நண்பி னுயிர்போ லுதயணற்
கிற்றிது கூறுமதி யிளையோள் பொருட்டா
வந்திவ ணிருந்த வெந்திறல் வீரன் 150
தன்னொடு வந்து மன்னரை யோட்டிப்
போதரத் துணிந்தன னேத மின்றி
ஆகும் வாயி லெண்ணி யப்படை
போக நூக்கல் பொருளெனக் கூறி
மீட்டவற் போக்க வேட்பனன் விரும்பியவன் 155
கூறிய மாற்றங் கோமான் றன்னொடு
வீறிய லமைச்சர் வேறாக் கேட்டுக்
குறையின் வேண்டுங் கரும முறையிற்
றானே முடிந்ததென் றானா வுவகையன்
யானையும் புரவியு மமையப் பண்ணி 160
மாண்வினைப் பொலிந்தோர் வருக மற்றோர்
சேனை நாப்பட் சேருக வின்றெனப்
பெயர்த்து மற்றவற் குரைத்தலிற் பெருமகன்
களிற்றுப் பாகனை விளித்தன னிறீஇ
அண்ணல் யானை பண்ணி வருகெனக் 165

யானைகள்[தொகு]

கண்ணார் தகைய கவுளிழி கடாத்தன
மண்ணார் நுதலின் மாசின் மருப்பின்
ஆற்ற லமைந்தன நீற்பாற் புறத்தன
அமர்பண் டறிந்தன வச்ச மில்லன்
புகரில் வனப்பின போரிற் கொத்தன 170
கோலங் கொளீஇச் சீலந் தேற்றின
இருபாற் பக்கமு மெய்து மெறிந்தும்
பொருவோர்ச் செகுக்கப் புன்படைக் கருவி
அடக்குபு பண்ணித் துடக்குபு காட்டும்
தோட்டி கொளீஇக் கூட்டுபு நிரைத்த 175
வேல்வ லிளையர் கால்புடை காப்பக்
கோயின் முற்றத் துய்த்தலின் வாய்மொழி
உதயணன் றன்மாட் டுய்க்க விவற்றொடு

குதிரை முதலியன[தொகு]

பொருபடைக் குதவும் புரவியும் புரவியொடு
செருவமர் மாந்தருஞ் செல்க விரைந்தென 180
ஒன்னா ரோட்டிய வுதயணன் கோயிற்
பொன்னார் முற்றம் புகுந்துடன் றுவன்ற

படைகளின் புறப்பாடு[தொகு]

அருந்திறல் யானை யமைந்தது நாடி
இரும்பிடர்த் தலையிற் பெருந்தகை மேல்கொள
உயர்ந்த வூக்கத் துருமண் ணுவாவும் 185
வயந்தக குமரனும் வாய்மொழிந் தாய்ந்த
உயர்ச்சி யுள்ளத் திசைச்சனு மேனைத்
தடவரை மார்பி னிடவக னுளப்பட
எந்நூற் கண்ணு முடம்பா டுடைய
முந்நூற் ற்றுவர் மொய்த்தொருங் கீண்டி 190
வலம்படு நமக்கென வலங்கொண் டேற
ஒழிந்த மாந்தர் பொலிந்துபுறங் காப்ப
இறையுடைச் செல்வ மியையத் தழீஇக்
குறைபட லில்லாக் கொற்றமொடு போந்து
முரசுஞ் சங்கு முருடு மொலிப்ப 195
அரசப் பெருங்கொடி யொருவலத் துயரி
எழுந்த பொழுதிற் றழங்குரன் முரசின்
தருசக குமரன் றான்பின் வந்து
கேகயத் தரசனைக் காவல் போற்றென
ஓம்படை கூறி யாங்கவ ணொழியப் 200

உதயணன் புறப்பாடு[தொகு]

பவ்வத் தன்ன படையமை நடுவண்
வவ்வற் கெண்ணிய வத்தவ ரிறைவன்
கெடலருஞ் சிறப்பிற் கேகயத் தரசனும்
உடலுநர்க் கடந்த வுருமண் ணுவாவும்
முன்ன ராக முன்னுக வென்னொடு 205
பின்ன ராவோ ரின்னரென் றுரைத்துக்
கூறுபடப் போக்கி வேறுபடப் பரப்பி
எல்லை யிகந்த விருங்கடல் போலப்
புல்லார் பாடியிற் குறுகலி னொல்லென

பகைவர் செயல்[தொகு]

ஒற்றர் மாற்றம் பெற்றுமுன் னிருந்தோர் 210
வேழமும் புரவியு மூழூழ் விரைஇக்
காழ்மண் டெஃகமொடு காற்படை பரப்பிப்
புண்ணிய முடையம் பொருமிவ ணின்னரை
நன்னர்ப் பெற்றே நாமெனக் கூறி
அங்கண்மாதிரத் த்திர்ச்சி யெய்த 215
வெங்கண் முரசொடு பல்லியங் கறங்க
அறியச் செய்த குறியுடைக் கொடியர்
கூற்றுல கின்று கொள்ளா தாமென
ஆற்றல் கலந்த வார்ப்பின ராகி
மலைத்துமேல் வந்த மகதவன் படையொடு 220
தலைப்பெய் தன்றாற் பகைப்படை பரந்தென்.

3 19 படை தலைக்கொண்டது முற்றிற்று.