பக்கம்:புதுவைக் கல்லறையில் புதிய மலர்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுவைக் கல்லறையில்|18 லாம் என்று அவர் கருதுகிருர். நாம் என்ன செய்ய முடியும்?' என்பது தான். அதன் பின்னர்-புரட்சிக் கவிஞர் நேரடியாக எந்தக் கட்சியிலும் தொடர்பு கொள்ளவில்லை என்றே கருது கிறேன். ஆயினும் எல்லாக்கட்சிகளைப்பற்றியும்தலைவர்களைப் பற்றியும் அவ்வப்போது அவருக்குத் தோன்றும் உள்ளக் குமுறலை-தமது கவிதைகளில் இடம் பெறச் செய்து வந்தார். அதனால் அவரிடம் நான் கொண்டிருந்த தொடர்பும், நாளடைவில் குறையும் சூழ்நிலை ஏற்பட்டது எனலாம். என்ரு லும் அவ ரிட்த்தில் கொண்டிருந்த மதிப்பும்- அவர்தம் கவிதை யில் கொண்டிருந்த பற்றும் மாறவில்லை; மாறியும் விடாது. கவிதையுலகில் அவர் ஒரு முடிசூடா மன்னர். புரட்சி உணர்வில் அவர் தமிழ் நாட்டுஷெல்லி; இயற்கையை பாடுவதில் அவர் வால்ட் விட்மன்; வரலாற்றைக் காவிய மாக்குவதில் அவர் இளங்கோ; வருணனையில் சொல்வளத்தில் அவர் கம்பர்; காலத்தின் தேவையில் அவர் பாரதி; நம்முடைய உள்ளத்தில் அவர் என்றும் பாவேந்தர்-புரட்சிக் கவிஞர்-இனமுரசு-தன்மான வீரர் -பகுத்தறிவுச் சுடர்.ஆனலும்-அவரது வாழ்க் கையில்-உலகியலில் அவரும் ஒரு மனிதனே! எனவே அவரால் தமிழுலகு பெற்ற பயனை எண்ணுவோர்-அவ ரைப் போற்ருமலிரார்! போற்றத் தவரு.ர். J தமிழகத்தில் இசையரங்குகளில் எல்லாம் மக்களுக்கு விளங்காத தெலுங்கு கீர்ததனங்களே, பக்கவாத்தி யங்களோடு முழங்கப்பட்டு வந்த காலம். செட்டி நாட் டரசர் அண்ணுமலையால் அதுகண்டு வேதனையுற்று தமிழிசை இயக்கம் தோற்றுவித்தார். அண்ணு மலைப் பல்கலைக் கழகத்தில் ஆண்டு தோறும் தமிழிசை விழா கொண்டிாட்ப்பட்டது. அவ்விழா நாட்களில் இசை