உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாரதியார் குயிற்பாட்டு.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல் வேதனை

21

சாதலைத் வேண்டித் தவிக்கின்றேன்” என்றதுவே. 50
சின்னக் குயிலிதனைச் செப்பியவப் போழ்தினிலே,
என்னைப் புதியதோர் இன்பச் சுரங்கவர
உள்ளத் திடையும் உயிரிடையும் ஆங்கந்தப்
பிள்ளைக் குயிலினதோர் பேச்சன்றி வேறற்றேன்!
”காதலோ காதலினிக் காதல் கிடைத்திலதேல் 55
சாதலோ சாதல் எனச் சாற்றுமொரு பல்லவியென்
உள்ளமாம் வீணைதனில், உள்ளவீ(டு) அத்தனையும்
விள்ள ஒலிப்பதால் வேறொர் ஒலியில்லை;
சித்தம் மயங்கித் திகைப்பொடுநான் நின்றிடவும்
அத்தருணத் தேபறவை யத்தனையுந் தாந்திரும்பிச் 60
சோலைக் கிளையிலெலாந் தோன்றி யொலித்தனவால்,
நீலக் குயிலும் நெடிதுயிர்த்தாங் கிஃதுரைக்கும்,
”காதல் வழிதான் கரடுமுர டாமென்பார்;
சோதித் திருவிழியீர்! துன்பக் கடலினிலே
நல்லுதுறுதி கொண்டதோர் நாவாய்போல் வந்திட்டீர்; 65
அல்லலற நும்மோ(டு) அளவாளாய் நான்பெறுமிவ்
வின்பத் தினுக்கும் இடையூறு மூண்டதுவே!
அன்பொடு நீரிங்கே அடுத்தநான் காநாளில்
வந்தருளல் வேண்டும், மறவாதீர், மேற்குலத்தீர்!
சிந்தை பறிகொண்டு செல்கின்றீர் வாரீரேல் 70
ஆவி தரியேன், அறிந்திடுவீர், நான்காம் நாள்;
பாவியந்த நான்குநாள் பத்துயுக மாகக்கழிப்பேன்;
சென்று வருவீர், என்சிந்தை கொடுபோகின்றீர்,
சென்று வருவீர் எனத் தேறாப் பெருந்துயரம்
கொண்டு சிறுகுயிருங் கூறி மறைந்ததுகாண். 75

4. காதல் வேதனை

கண்டதொரு காட்சி கனவுநன(வு) வென்றறியேன்,
எண்ணுதலுஞ் செய்யேன், இருபதுபேய் கொண்டவன்போல்
கண்ணும் முகமும் களியேறிக் காமனார்
அம்பு நுனிகள் அகத்தே அமிழ்ந்திருக்க,
கொம்புக் குயிலுருவங் கோடிபல கோடியாய் 5