பக்கம்:வானொலியிலே.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொங்கல் விழா 67

பெருகினுல் பொங்கும். மனம் பெருகினல் பொங்கும் இதனால் பொங்க வேண்டுமென்று வாழ்த்துவது பெருக வேண்டும் என்று வாழ்த்துவதாகவே இருக்கிறது. ஆகவே தமிழ்நாட்டுப் பெருங்குடி மக்களாகிய காம் பொங்கம் பெருநாளும், தமிழ்த்திருநாளும் ஆகிய இங்காளில் ஒருவருச் கொருவர் பொங்கல் வணக்கம் கூறி பொங்குக டொங்கல் என்று வாயாரக் கூறி வாழ்த்துவோமாக.

காடும் மழையும் கலமாய்ப் பொங்கட்டும் விளைவும் உழைப்பும் விரைவாய்ப் பொங்கட்டும் கல்வியும் அறிவும் கலந்து பொங்கட்டும் கைத்தொழில் வாணிபம் கருத்தாய்ப் பொங்கட்டும் சிறப்பும் செல்வமும் சேர்ந்து பொங்கட்டும் உண்மையும் ஒழுக்கமும் ஓங்கிப் பொங்கட்டும் அன்பும் அறமும் அழகாய்ப் பொங்கட்டும் பசியும் பிணியும் பறந்து ஒழியட்டும் - வீரமும் ஆண்மையும் விரைந்து பொங்கட்டும் ஒற்றுமை வலிமை உயர்ந்து பொங்கட்டும் அன்னியன் படையெடுப்பு அழிந்து ஒழியட்டும் அனைவர் உள்ளமும் மகிழ்ங்து பொங்கட்டும் பொங்கட்டும்...பொங்கட்டும்...எங்கும் பொங்கட்டும் வாழிய பொங்கல்..... வணக்கம் பல. -

(13-1-45-ல் வாழ்த்தியது)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வானொலியிலே.pdf/68&oldid=646857" இலிருந்து மீள்விக்கப்பட்டது