இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நல்ல கதைகள்
82
அக்கம் பக்கம் உள்ளவர்கள் அந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்களே ஒழிய, அவனைப் பிடிப்பதற்கு யாரும் முன்வரவே இல்லை. இதுதான் பட்டணத்துப் பண்பும் பழக்கமும்.
சிறுவன் சிங்காரம் கிராமத்து வளர்ப்பல்லவா!
அவன் உள்ளம் கொதித்தது. உடனே எதிரே ஓடி வந்து, அந்தத் திருடனின் இடுப்பைக் கோர்த்துப் பிடித்துக் கொண்டான். 'திருடன் திருடன்' என்று கத்தினான். திருடன் ஆத்திரமடைந்தாள் சிங்காரத்தின் பிடியிலிருந்து விடுபட ஒரு சுற்று சுற்றினான்.
சிங்காரம் ஒருபுறமும், கைப்பை ஒரு புறமும் சிதறிப் போய் விழுவதை