எஸ்.நவராஜ் செல்லையா
57
அதைப் போலவே, விரட்டும் நபர் கம்பத்தினை உதைத்துத் தொடும்போது அவரது உடல் முழுவதும் முற்றிலும் அந்தரத்தில் இருப்பதால், அவர் கம்பக் கோட்டினைக் கடந்ததாகவே ஏற்றுக் கொள்ளப்படும்.
ஓடி விரட்டுபவர் கம்பக் கோட்டை முழுவதும் கடந்த பிறகுதான் திரும்பி வரவேண்டும் என்பதுதான் விதிமுறையாகும்.
4. ஓட்டக்காரரைத் தொடும் முறையும் - தவறுகளும்
ஓடி விரட்டுகின்ற ஒருவர், ஓட்டக்காரரை விதிகளுக்குட்பட்டு முறையாகவே தொட்டுவிட்டாலும், தொட்ட உடனேயே (முகம் திரும்புதல், நடுக்கோட்டைத் தொடுதல் போன்ற தவறுகள்) தவறு செய்தால் தொடப்பட்ட ஆட்டக்காரர் வெளியேற்றப்பட மாட்டார் என்று கோகோ விதி தெளிவாகவே கூறுகிறது.
ஓட்டக்காரரைத் தொட்டுவிட்டவுடன், தான் எப்படியும் திரும்பலாம் என்று பலர் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். அந்த எண்ணம் தவறான எண்ணமாகும். ஓட்டக்காரரைத் தொட்டாலும், தொடாவிட்டாலும், ஓடி விரட்டுபவர் அவர் பின்பற்றி ஓடும் விதிமுறைகளை கட்டாயமாகக் கடைபிடித்தே ஆக வேண்டும். ஒரு ஓட்டக்காரரைத் தொட்டுவிட்டதாலேயே அவர், தொடர்ந்து விதியை மீறிடலாம் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய வாதமல்ல. அவ்வாறு நினைப்பதும் செயல்படுவதும் மாபெருந் தவறாகும்.
வேறு சிலர், தொட்டதற்கு சரிதான் என்கின்ற ஒரு முடிவும், தவறுக்கு தண்டயைாக வேறு ஒரு முடிவும் கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். அதாவது,