பக்கம்:ஆய்வுக் கட்டுரைகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துண்டு 1 + 1

31@Iou¡ Goueosúo (COLECTORATE)

அரசியல் பணிகளை நடைமுறைப் படுத்தல், காரியமாற்றல் முதலியவற்றைப் புரிய கருமிகள்' என்பாரும், ஏவற்பணிகளைப் புரியும் பணிமக்களும் அலுவற் செயலக அமைப்பினர். கருமிகளில் பெருந்தரம் (U.D.C.) சிறுதரம் (L.D.C.) எனும் பிரிவினர் இருந்தனர். இஃது இக்காலத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் போன்றது.

அலுவற் பெருமக்கள்

மேற்காட்டப்பட்டதற்கு மேல் நாட்டதிகாரி (Chiel Secretary) sais grawf (Superintendents) aith ustavrrrr, suffi#ớngu செய்வார், படைத்தலைவர், விடையதிகாரி, பட்டோலைப் பெரு மாள், திருவாய்க்கேள்வி, திருமந்திர ஓலை, திருமந்திர ஓலை நாயகம் எனும் தலைமை அலுவர்கள் இருந்தனர். இப்பதவிகளிற் பல இக்காலத்துச் சிலசில பணிமாற்றங்களுடன் உள்ளன. இவ் வமைப்பை இன்று வழங்கும் தலைமைச் செயலகம் (Secretriate) என்று குறிக்கலாம்.

அமைச்சர் குழு

இந்த அமைப்புக்குமேல் தலையான அமைப்பாக அமைச்சர் குழு இருந்தது. அவர்கள் உடன்கூட்டத்து அதிகாரிகள் எனப் பட்டனர். இவர்கள் அரசருடன் நேரடித் தொடர்பு கொண்டு பணியாற்றியோர். அமைச்சர், தலைமைப் படைத்தலைவர், சான்றோர் முதலியவர் இக்குழுவிலமைந்து அரசனுழை இருந்து சூழ்ச்சிகள் கூறியும் அரசர் ஆணைகளைப் பரவலாக்கியும் ஆளு கையை நிறைவாக்கினர்.

மன்னன் உடலானான்

நாட்டை ஆண்டவன் இராசராசனே ஆயினும் பரவலான ஆட்சித் தலைக்கயிற்றினைச் சுண்டி ஆட்சியைச் செலுத்தும்