இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கவிதைப் பயிற்சி - 3
சோலைக்கு மறுபெயர் பொழில் அதைச்
சுற்றியே திகழும்........
சாலையின் இருபுறம் மரங்கள் அவற்றின்
தழைகள் வயலுக்கு.................
ஆற்றிலே ஓடிடும் தண்ணீர் - நாம்
அழுதால் கசிந்திடும் .........
காற்றிலே மிதப்பது கீதம் - கை
கால்களை முடக்கிடும்.............
உயரே பறந்திடும் பட்டம் - ஊர்
ஒழுங்கைக் காத்திடும்...........
அயர்ந்தால் வருமே நோய்கள் - தாவி
ஆள்மேல் பாயுமே............
வீட்டுக்குக் காவல் கதவு - துன்ப
வேளையில் பிறருக்கு................
பாட்டுக்குத் தேவை ராகம் - கேட்டுப்
புற்றினில் சீறிடும்...........
(வாதம், உரங்கள், உதவு, நாகம், எழில், சட்டம், நாய்கள், கண்ணீர்)
39