பக்கம்:நல்ல பாடல்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவிதைப் பயிற்சி - 3

சோலைக்கு மறுபெயர் பொழில் அதைச்
சுற்றியே திகழும்........
சாலையின் இருபுறம் மரங்கள் அவற்றின்
தழைகள் வயலுக்கு.................

ஆற்றிலே ஓடிடும் தண்ணீர் - நாம்
அழுதால் கசிந்திடும் .........
காற்றிலே மிதப்பது கீதம் - கை
கால்களை முடக்கிடும்.............

உயரே பறந்திடும் பட்டம் - ஊர்
ஒழுங்கைக் காத்திடும்...........
அயர்ந்தால் வருமே நோய்கள் - தாவி
ஆள்மேல் பாயுமே............

வீட்டுக்குக் காவல் கதவு - துன்ப
வேளையில் பிறருக்கு................
பாட்டுக்குத் தேவை ராகம் - கேட்டுப்
புற்றினில் சீறிடும்...........


(வாதம், உரங்கள், உதவு, நாகம், எழில், சட்டம், நாய்கள், கண்ணீர்)

39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்ல_பாடல்கள்.pdf/41&oldid=1313808" இலிருந்து மீள்விக்கப்பட்டது